தொகுப்பு - நவம்பர், 2006

15.பக்தர்கள்

வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

14.வல்லவன்

விட்டில் பூச்சி

வாழ்க்கையில்

வெளிச்சத்தை
துணையாக்குபவன்
புத்திசாலி
இருட்டில்
நடக்க பழகியவன்
அனுபவசாலி
அங்கேயே
அமர்ந்து கொண்டவன்
முட்டாள்
முன்னவனை
பின்னவன்
மிஞ்சினாலும்
வல்லவனுக்கு
வல்லவன் உண்டு
வையகத்தில்..

13.ஆணவம்

அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..

பாராழும் ராஜாவை
போல் – கருவரை
ஆண்டவன்
நான்..

அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..

பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..

தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு

கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..

பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..

கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் – எங்களை..

விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..

விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்…

அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..

என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..

தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்…

13.சிவப்பு செதில்கள்


கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..
மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..
உனக்கும்
எனக்குமான
தூரம் – துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..
தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்
என்னை சுற்றி
மின்னல் – உன்
கண்கள் சுற்றி
மழை
நம்மை சுற்றி
வெளி..