அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் – கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் – எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்…
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்…
![home page HOME [www.thottarayaswamy.net]](http://thottarayaswamy.net/fimg/menu_home.png)

இவன் கூறியது:
on டிசம்பர் 4, 2006 at 12:25 மு.பகல்
அழுத்தமான கவிதை!
இந்த புகைபடத்தை எங்கிருந்து பிடித்தீர்?
-இவன்.
amsa கூறியது:
on ஜனவரி 22, 2009 at 5:42 பிற்பகல்
siupper
amsa கூறியது:
on ஜனவரி 22, 2009 at 5:42 பிற்பகல்
supper