தொகுப்பு - டிசம்பர் 18, 2006

26.இவைகளுக்காய்

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்…

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

25.அடைக்கும் தாள்


இப்போது-

இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு…

காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..

இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..