{ ஜனவரி 4, 2007 @ 9:24 பிற்பகல் }
·
{ வன்முறை }
{ Tags: மகாத்மா }
·
{ }

தோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..
சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..
கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல
என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..