அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை
என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய் அழுததுண்டு
தனிமையில்..
அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை
என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய் அழுததுண்டு
தனிமையில்..
இப்போதே
என்னைகொன்றுவிடு..
தினம் தினம்
உன் விழி போர்படைகள்
புடைத்தெடுத்துவிடுகின்றன.
உயிரை
ஒழித்துவைத்துக்கொண்டு
பார்க்க வேண்டியதாய் உள்ளது
உன்னை.
கடவுளிடம் மன்றாடி
வரமொன்று பெற்று
பெண்ணாய்
பூமிக்குவந்தது
மேகமொன்று..
எங்கெங்கோ வாழ்ந்து
புகழாரம் சூட்டிய
அழகோடு
என்னவள் வசிக்கும்
ஊருக்கு வந்தது..
வழியில்
அவளைகண்டபோது
அவளழகில் மயங்கி-
பின் நாணி
கடவுகளை அடைந்தது..
அவளை விட
அழகாய் மீண்டும்
தருவிக்க சொன்னது
மேகம்.
உலகில்
அவளுக்கு இணையாய்
இன்னொரித்தியை
பிரசுவிக்க முடியாது
இருந்தாலும்
நீ இரண்டாம் அழகி..
என்றாறம் கடவுள்.
தன் ஆசை விடுத்து
மீண்டும் மேகமானது
மேகம்..
இப்போதும்
நிறைவேராத
ஆசை எண்ணி
அழுது வடிக்கின்றது
கண்ணீரை
மழையாய்..
ஒரு மழைகால நேரத்தில்
என் காதோடு
சொல்லிச்சென்றது
மேகம்
யாரிடமும் சொல்லிவிடாதே
என்று.
கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்
முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை
அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!
மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் – நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா.