தொகுப்பு - April, 2008

தேவதையின் காடு

விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்

விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்

மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?

கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?

மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?

ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?

என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?

நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….

தொடுவானப்பூக்களில்

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது

யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல

நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு

நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

நீரோடை

முத்தம் பூத்த
பூமியில்
கண்ணாடி மழை

உடைந்து
நொறுங்கியது
மழையின் துளிகள்

பூக்களுக்குள்
தஞ்சம் புகுந்தது

உன் நா மின்னல்
சுலற்றி அடித்தலில்

நீரோடை மட்டும்
ஏனடீ என் மனதில்?

 

குடைக்குள் காளான்

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

விக்கல்

நீ தனியாக
அமர்ந்து
நம் நினைவுகளை
விழுங்கும் போதெல்லாம்
அன்பே!

விக்கல் எடுத்தே
வியர்த்து போகிறது
என் மனசு.

தேவதை மட்டும்

நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்

குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட

நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.

பாரடி என் மோகினி

சொன்னால்
“நம்பமாட்டேன்”
என்கின்றாய்
முகம் திருப்பிக் கொண்டு!

முகர்ந்துப் பார்
கவிதையில்
உன் வாசம்

வருடிப்பார்
காகிதத்தில்
உன் பரிசம்

வாசித்துப்பார்
உன்னை நேசிக்கும்
என் இதயம்

நம்பிக்கை வரவில்லையா?
கசக்கி எறிந்துப்பார்

நான் இறந்துக்கிடப்பது
புரியும்.

______

ஏன்டீ என்னை இப்படி
இம்சை செய்கிறாய்?

நான் தந்த முத்ததில்
என்ன குறைக்கண்டாய்

திருப்பி வாங்கிக்கொண்டு
வேறொன்று தா என்று,
உன் விழியடியில்
கிரங்கிக் கொண்டிருக்கும்
இவனிடம், தலையனை கொண்டு
அடிக்கின்றாய்.

______

நீ கோபமாக
இருக்கின்றாய்.

சரி, பிறகென்ன
நீ முத்தம்
தந்து என்னிடம்
கெஞ்சுவாய்

இனிமேல்
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்
என்று.!

அதற்கேனடி
இவ்வளவு நேரமாக
காற்கவைக்கின்றாய் என்னை?

_______

மக்கு,
உன் தவறுகளில்,
சரியாக செய்ய
கற்றுத்தருபவள்
நான்.

அதற்காக
முத்தத்தை கூடவா
ஒழுங்காக இடமாட்டாய்?

____

உன் ஞாபகங்களுக்கு
அப்பால் நின்று
நனைந்து கொண்டிருக்கின்றது
என் மனசு

குடைக்கேட்டு
வரவில்லை
என் கவிதைகள்
உன்னிடம்

நீ சிந்திவிடும்
ஒவ்வொரு கண்ணீர்
துளியிடமும்
மன்னிப்புக்கேட்கத்தான்.

************

more at www.thottarayaswamy.net

திகட்டாத இம்சை

என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்

திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்

இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.

இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!

எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை

தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி

தவழ்ந்தது
மனசு.

மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன

என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?

மாறன்

நான்
எதை இழந்து
தேடினேன்

நீ எனக்கு கிடைத்தாய்
என்பதின் அர்த்தத்தை

உன் முதல் முத்ததில்
ஒழிந்து வைத்திருந்தான்
மாறன்.

 

தவழும் மனசு

நீ பார்க்கையில் தான்
பார்வை என்பதின்
அர்த்தமும்
பார்க்க வேண்டும்
என்ற தவிப்பும்
புரிய ஆரம்பித்தது

உன்னை கண்டதும்
தன் கைகளை
நீட்டி அழைக்கும்
அந்த பக்கத்து
வீட்டு குழந்தை போல

உன்னை நோக்கித்
தவழ்கின்றது மனசு.

« முந்தைய இடுகைகள்