
நான்
எதை இழந்து
தேடினேன்
நீ எனக்கு கிடைத்தாய்
என்பதின் அர்த்தத்தை
உன் முதல் முத்ததில்
ஒழிந்து வைத்திருந்தான்
மாறன்.

நான்
எதை இழந்து
தேடினேன்
நீ எனக்கு கிடைத்தாய்
என்பதின் அர்த்தத்தை
உன் முதல் முத்ததில்
ஒழிந்து வைத்திருந்தான்
மாறன்.

நீ பார்க்கையில் தான்
பார்வை என்பதின்
அர்த்தமும்
பார்க்க வேண்டும்
என்ற தவிப்பும்
புரிய ஆரம்பித்தது
உன்னை கண்டதும்
தன் கைகளை
நீட்டி அழைக்கும்
அந்த பக்கத்து
வீட்டு குழந்தை போல
உன்னை நோக்கித்
தவழ்கின்றது மனசு.

நீ தவறுகள் செய்யும்
பொழுதுகளிலெல்லாம்
எப்போதும் போல
இன்றும் மறந்து
என்னை உன் எச்சிலால்
நனைத்துவிட்டாய்
உன் நகங்களின்
இடுக்கினில்
வாழ்ந்துக் கிடப்பதுதான்
எவ்வளவு சுகம்.