திகட்டாத இம்சை

என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்

திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்

இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.

இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!

எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை

தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி

தவழ்ந்தது
மனசு.

மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன

என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?

1 மறுமொழி »

  1. புகழன் கூறியது:

    அழகிய கவிதைகள்
    அதைவிட அழகிய படங்கள்
    தொடர்ந்து எழுதுங்கள்.


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்