
அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது
யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல
நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு
நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது
யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல
நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு
நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

முத்தம் பூத்த
பூமியில்
கண்ணாடி மழை
உடைந்து
நொறுங்கியது
மழையின் துளிகள்
பூக்களுக்குள்
தஞ்சம் புகுந்தது
உன் நா மின்னல்
சுலற்றி அடித்தலில்
நீரோடை மட்டும்
ஏனடீ என் மனதில்?

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்
குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே
என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

நீ தனியாக
அமர்ந்து
நம் நினைவுகளை
விழுங்கும் போதெல்லாம்
அன்பே!
விக்கல் எடுத்தே
வியர்த்து போகிறது
என் மனசு.