
விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்
விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்
மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?
கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?
மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?
ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?
என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?
நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….
![home page HOME [www.thottarayaswamy.net]](http://thottarayaswamy.net/fimg/menu_home.png)

விஜய்குமார் கூறியது:
on ஏப்ரல் 22, 2008 at 12:15 பிற்பகல்
இதயத்தை ஆட்கொன்ட
கவிதை தொகுப்பு…
நன்றி
அழகான கவிதைகளுக்கு..
படைத்த உங்களுக்கு..
விருப்பமுடன்
விஜய்குமார்
ambika கூறியது:
on ஏப்ரல் 22, 2008 at 12:16 பிற்பகல்
nice
NELSON கூறியது:
on ஜூன் 1, 2008 at 8:51 மு.பகல்
U r poems are very excellant and very impressive…
i like very much sir……